1) மேனி நிறம் பொன்நிறமாக மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு 1 வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி நிறம் பொன் நிறமாகும். 2) தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டால் தேகம் பொன்னிறமாகும். 3) முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தல் முகம் பளபளப்பாகும். 4) முகச்சுருக்கம் மறைய முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வந்தால் முகச்சுருக்கம் மறையும். 5) உடல் மினுமினுப்பாக இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும். 6) உடல் நிறம் பளபளக்க அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி துளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் பளபளப்பாகும். 7)உடல் வனப்பு உண்டாக முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர வேண்டும். 8) முக வசீரகம் சந்தன கட்டை எலுமிச்சை சாறில் ஊர வைத்து பூசினால் முக வசீகரமாகும். 9) முகம் பிரகாசமடைய கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வ...